இது தானே ஓடிந்ததல்ல தானே ஒடித்த பலா
ஒ தென்றலே நீ
தீண்டிய போதெல்லாம்
வெட்கத்தால் குனிந்த
என் தலையை
ஏன் திருகி சென்றாய்?…
நான் காய்க்கும்
முன்னமே என்னைக்
களவாடியது
என் கனிகளுக்கா ?
ஒ.. அகலிகா
கெளசிக உருவில் வந்த
இந்திரனும் தானேபோல்
தான் நுழைந்தானோ?
நானோ அவனுடன்
ஓடிப்போயிருந்தால்
பிழைத்திரிப்பேனோ - ஆனால்
உலகம் பழித்திருக்கும் -
நாணம் இல்லையென…
நான் வீழ்ந்த பின்னரே
அறிந்தேன் – நான்
வஞ்சகனின்
வலி அறியா
பெண்மையென
வடியும் என்
கண்ணீரும்
வெண்மையென …
தீண்டிய போதெல்லாம்
வெட்கத்தால் குனிந்த
என் தலையை
ஏன் திருகி சென்றாய்?…
நான் காய்க்கும்
முன்னமே என்னைக்
களவாடியது
என் கனிகளுக்கா ?
ஒ.. அகலிகா
கெளசிக உருவில் வந்த
இந்திரனும் தானேபோல்
தான் நுழைந்தானோ?
நானோ அவனுடன்
ஓடிப்போயிருந்தால்
பிழைத்திரிப்பேனோ - ஆனால்
உலகம் பழித்திருக்கும் -
நாணம் இல்லையென…
நான் வீழ்ந்த பின்னரே
அறிந்தேன் – நான்
வஞ்சகனின்
வலி அறியா
பெண்மையென
வடியும் என்
கண்ணீரும்
வெண்மையென …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக